செவ்வாய், 28 ஜூன், 2016

TRB:272 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியீடு

தமிழகம் முழுவதும் 2016 -ஆம் ஆண்டுக்கான 272 விரிவுரையாளர், இளநிலை விரிவுரையாளர், மூத்த விரிவுரையாளர்பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) வெளியிட்டுள்ளது.
மொத்த இடங்கள்:272
பணி - காலியிடங்கள் விவரம்:
பணி: Senior Lecturers-38 சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 தர ஊதியம் ரூ.5,700
பணி: Lecturers - 166 சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 தர ஊதியம் ரூ.4,800
பணி: Junior Lecturers - 68 சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 தர ஊதியம் ரூ.4,800

தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு மற்றும் புவியியல் துறையில் முதுகலை பட்டத்துடன் 55சதவீத மதிப்பெண்களுடன்எம்.எட் முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு
செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:அனைத்து பிரிவினருக்கும் ரூ.50

விண்ணப்பிக்கும் முறை:தமிழகத்தின் 32 மாவட்டங்களில் உள்ள கல்வி அதிகாரி அலுவலகத்தில் (Chief Education Officer) விநியோகம் செய்யப்படும் விண்ணப்பங்களை வாங்கி, தெளிவாக பூர்த்தி செய்து, WITH PRESCRIBED EXAMINATION FEE அந்தந்தமாவட்டCEO கல்வி அலுவலகங்களிலேயே அளிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆசிரியர் பணியாளர் தேர்வாணய
அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

விண்ணப்ப விநியோகம் தொடங்கும் தேதி:15.07.2016
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கானகடைசி தேதி:30.07.2016
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி:17.09.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.trb.tn.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை அல்லது http://trb.tn.nic.in/ DTERT2016/28062016/Noti.pdf என்ற லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.

சி.பி.எஸ்.இ-க்கு இணையான பாடத்திட்டத்தை உருவாக்குவதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை இப்போதே தொடங்க வேண்டும் -பாமக நிறுவனர்

சி.பி.எஸ்.இ-க்கு இணையான பாடத்திட்டத்தை உருவாக்குவதற்கான ஏற்பாடுகளை
தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை இப்போதே தொடங்க வேண்டும் என்று பாமக
நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''இந்திய தொழில்நுட்பக்
கல்வி நிறுவனங்கள் (IITs), தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள்(NITs)
உள்ளிட்ட மத்திய உயர் கல்வி தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில்
சேர்வதற்கான நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, வரும் 1ஆம் தேதி
முதல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடங்கவுள்ளது. கடந்த ஆண்டுகளைப் போலவே
இந்த முறையும் தமிழக மாணவர்களுக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது.
இந்தியா முழுவதுமுள்ள 22 இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில்
மொத்தமுள்ள சுமார் 10 ஆயிரம் இடங்களில் சேர்ப்பதற்காக 31 ஆயிரம்
மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் ஐ.ஐ.டிக்களில்
சேர்க்கப்படும் 10,000 பேர் தவிர மீதமுள்ளவர்கள் என்.ஐ.டி.க்கள்,
இந்தியத் தகவல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் (IIITs) உள்ளிட்ட உயர்
தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் சேர்க்கப்படுவார்கள்.
ஐ.ஐ.டி.க்களில் சேர்ப்பதற்காக முதல்கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள
31,000 மாணவர்களில் வெறும் 60 மாணவர்கள் மட்டுமே தமிழ்நாடு மாநிலப்
பாடத்திட்டத்தைப் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம்
ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வில் கலந்து கொண்ட 12 மாநிலப் பாடத் திட்டங்களில்
தமிழகப் பாடத்திட்டம் தான் 0.2% தேர்ச்சியுடன் கடைசி இடத்தைப்
பிடித்திருக்கிறது.
தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்திலிருந்து தேர்ச்சி பெற்ற 60 மாணவர்களில்
எத்தனை பேருக்கு ஐ.ஐ.டிக்களில் சேர இடம் கிடைக்கும் என்பது தெரியவில்லை.
கடந்த ஆண்டில் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த 33 பேர்
மட்டுமே தேர்ச்சி பெற்றனர். அவர்களில் 9 பேர் மட்டுமே ஐ.ஐ.டிக்களில் சேர
முடிந்தது. இம்முறை கடந்த ஆண்டை விட அதிக எண்ணிக்கையிலானவர்கள் தேர்ச்சி
பெற்றுள்ள போதிலும், தகுதி மதிப்பெண் அடிப்படையில் பார்த்தால் கடந்த
ஆண்டை விட குறைந்த மாணவர்கள் தான் ஐ.ஐ.டியில் சேரமுடியும். தமிழ்நாடு
மாநிலப்பாடத்திட்டத்தின் தகுதி அந்த அளவில் தான் உள்ளது.
அதேநேரத்தில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியப் பாடத்திட்ட (சி.பி.எஸ்.இ)
மாணவர்கள் 53% அளவுக்கு, அதாவது 16,430 பேர் ஐ.ஐ.டிக்களில் சேர தகுதி
பெற்றுள்ளனர். தெலுங்கானா மாநிலப் பாடத்திட்ட மாணவர்களில் 2293
பேரும்(7.7%), மராட்டியப் பாடத்திட்ட மாணவர்களில் 2077(6.7%) பேரும்,
ராஜஸ்தான் மாநிலப்பாடத்திட்ட மாணவர்களில் 2015(6.5) பேரும், ஆந்திர மாநில
பாடத்திட்ட மாணவர்களில் 1307 (4.21%) பேரும் ஐ.ஐ.டிக்களில் சேர தகுதி
பெற்றுள்ளனர்.
மிகவும் பின்தங்கிய மாநிலம் என்று விமர்சிக்கப்படும் பிஹார் மாநிலப்
பாடத் திட்டத்திலிருந்து கூட 900 மாணவர்கள் இந்த நுழைவுத் தேர்வில்
தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனால், பிஹார் மாநிலப் பாடத்திட்டத்தை விட 15
மடங்கு குறைவானத் தேர்ச்சியையே தமிழகப் பாடத்திட்டம் பெற்றிருக்கிறது
என்பதிலிருந்தே அப்பாடத் திட்டம் எந்த அளவுக்கு தகுதி குறைவானதாக
இருக்கும் என்பதை மிக எளிதாக புரிந்து கொள்ள முடியும்.
இந்தியாவின் எந்த மாநிலத்தை எடுத்துக் கொண்டாலும் அங்கு மாநிலப்
பாடத்திட்டத்தில் படித்து ஐ.ஐ.டி., நுழைவுத்தேர்வுக்கு தேர்ச்சி
பெற்றவர்களை விட அதிக எண்ணிக்கையில் மத்திய இடைநிலை கல்வி வாரியப்
பாடத்திட்ட மாணவர்கள் தேர்ச்சி பெறுவார்கள். ஆனால், ஆந்திரம்,
தெலுங்கானாவில் மட்டும் சி.பி.எஸ்.இ. மாணவர்களை விட, மாநிலப்பாடத்திட்ட
மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இரு மாநிலங்களிலும்
சேர்த்து சி.பி.எஸ்.இ மாணவர்கள் 130 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ள
நிலையில், 3600 மாநிலப்பாடத்திட்ட மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஆனால், தமிழகத்தில் சி.பி.எஸ்.இ மாணவர்கள் 555 பேர் தேர்ச்சி பெற்றுள்ள
நிலையில், அவர்களில் சுமார் 10% மாணவர்கள் மட்டுமே தமிழகப்
பாடத்திட்டத்திலிருந்து தேர்ச்சி பெற்றிருப்பது பெருமைக்குரியதல்ல.
தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்ட மாணவர்கள் ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வுகளில்
போதிய அளவில் தேர்ச்சி பெற முடியாமல் போவதற்கு ஏராளமான காரணங்களைக் கூற
முடியும் என்றாலும், மாநிலப் பாடத்திட்டம் சிந்திக்கும் திறனை தூண்டுவதாக
இல்லாமல் மனப்பாடத்தை ஊக்குவிக்கும் வகையில் இருப்பது தான் முதன்மையான
காரணம் ஆகும்.
சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஒரு பாடம் நடத்தி முடிக்கப்பட்டால்
அதிலிருந்து எந்த கோணத்தில் வேண்டுமானாலும் வினாக்கள் எழுப்பப்படும்;
அந்த வினாக்களுக்கு மாணவர்களும் சளைக்காமல் பதில் எழுதுவார்கள். ஆனால்,
மாநிலப் பாடத்திட்டத்தில் புத்தகத்தில் ஒரு வினா எப்படித்
தரப்பட்டிருக்கிறதோ அதிலிருந்து ஒரு வார்த்தையை மாற்றி கேட்டால் கூட
அதற்கு மாணவர்களால் பதிலளிக்க முடியவில்லை. இப்படி ஒரு பாடத்திட்டத்தை
வைத்துக்கொண்டு இன்னும் நூறு ஆண்டுகள் ஆனால் கூட தேசிய அளவிலான
நுழைவுத்தேர்வுகளில் வெல்லமுடியாது.
ஐ.ஐ.டி. உள்ளிட்ட தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளில் எளிதாக வெற்றி
பெறும் வகையில் தமிழ்நாடு மாநிலப் பாடத் திட்டத்தை மாற்றி அமைக்க
வேண்டும் என்று பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறேன். ஆனால், தமிழக அரசு
அதை கண்டுகொள்வதில்லை.
அடுத்த ஆண்டு முதல் மருத்துவப் படிப்புகளுக்கு அனைத்து கல்வி
நிறுவனங்களிலும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு (NEET)
கட்டாயமாக்கப் படுவது உறுதியாகிவிட்டது. பொறியியல் படிப்புகளுக்கும் பொது
நுழைவுத்தேர்வு கட்டாயமாக்கப்படலாம் என்று கூறப்படுவதால், அதை எதிர்கொள்ள
வசதியாக சி.பி.எஸ்.இ-க்கு இணையான பாடத்திட்டத்தை உருவாக்கி
அறிமுகப்படுத்துவது தான் சரியானதாக இருக்கும். எனவே, அதற்காக ஏற்பாடுகளை
தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை இப்போதே தொடங்க வேண்டும்'' என்று
ராமதாஸ் கூறியுள்ளார்.

TRB DIET :EDUCATIONAL QUALIFICATION

TRB DIET JUNIOR LECTURER VACANCIES

TRB DIET : LECTURER VACANCIES

TRB DIET SENIOR LECTURER VACANCIES

TRB DIET POST DETAILS

TRB DIET LECTURER EXAM NEWS PAPPER ADVT

FLASH NEWS : TRB DIET EXAM ANOUNCED FOR SENIOR LECTURER /LECTURER/ JUNIOR LECTURER

திங்கள், 27 ஜூன், 2016

DINAMANI NEWS:தமிழகத்தில் 3500 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன

ஸ்வயம் ஆன்லைன் இலவச இணையதளம் படிப்பு சேவை ஆகஸ்டு 15 சுதந்திர தினத்தன்று தொடங்க உள்ளது

மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பில் ஸ்வயம் ஆன்லைன் இலவச இணையதளம் படிப்பு சேவை ஆகஸ்டு 15 சுதந்திர தினத்தன்று தொடங்க உள்ளது என்று பல்கலைக்கழக மானியக்குழு துணைத் தலைவர் ஹெச்.தேவராஜ் கூறினார்.

சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்தில் வள்ளியம்மை பொறியியல் கல்லூரியின் 12 வது பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில் அவர்

மேலும் பேசியதுபொறியியல் படிப்பில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டாமல் இருப்பதும்,1 லட்சம் இடங்கள் காலியாக உள்ளன என்பதும் நல்ல செய்தி அல்ல.

பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்காமல் இருப்பதற்குக் காரணம் அவர்கள் வேலைவாய்ப்பு பெறும் தகுதியுடையவர்களாக உருவாக்கப்படுவதில்லை.

இந்நிலை மாற்றப்பட வேண்டும்.மாணவர்களின் தொழில்நுட்ப அறிவாற்றலை மேம்படுத்த பல்வேறு நாடுகளைச் சார்ந்த பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மூலம் பயிற்சி வகுப்புகள் நடத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்வயம் ஆன்லைன் இலவச படிப்பு சேவை மூலம்  10 பிராந்திய மொழிகளில் வழங்கப்படவிருக்கும் 500 பாடத்திட்டங்களை உயர்கல்வி பயிலும் மாணவர்கள் பயன்படுத்தி தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.


 

மேல்நிலை வகுப்பில் 10 ஆண்டுகளாக மாற்றப்படாத பாடத் திட்டங்கள்

பத்து ஆண்டுகள் ஆகியும் மேல்நிலை வகுப்புகளான பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பாடத் திட்டங்கள் மாற்றப்படவில்லை.

கால மாற்றத்துக்கு ஏற்ப பாடத் திட்டத்தில் மாற்றம் கொண்டு வராதது, தொழில்நுட்ப வளர்ச்சி போன்ற காரணங்களால் ஐஐடி நுழைவுத் தேர்வு, பொறியியல், மருத்துவச் சேர்க்கைகளில் தமிழக மாணவர்கள் பின்தங்கி உள்ளதாகவும், ஆந்திரம் உள்ளிட்ட பிற மாநில மாணவர்கள் முன்னிலை பெறுவதாகவும் கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நாட்டில் உள்ள தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் உலக தரத்துக்கு இணையாக தரமான தொழில்நுட்பக் கல்வியை ஐஐடி, ஐஐஎஸ்சி, என்ஐடி ஆகியன வழங்குகின்றன. இவற்ரில், ஐஐடிக்களில் சென்னை ஐஐடியும், தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் திருச்சி என்ஐடியும் முன்னிலை பெற்றுள்ளன.

ஜே.இ.இ. தகுதித் தேர்வில் குறைந்த அளவே தேர்ச்சி: இவற்றில் படிக்கச் செல்லும் தமிழக மாணவர்கள் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் குறைவாக இருக்கிறது. குறிப்பாக, மாநில கல்வி வாரியத்தின் கீழ் பிளஸ் 2 முடித்து வெளிவரும் 3 லட்சம் பேரில் நூற்றுக்கும் குறைவானவர்களே ஐஐடியில் சேர்க்கை பெறுவதற்கான ஜே.இ.இ. முதன்மைத் (அட்வானஸ்டு) தேர்வில் தகுதி பெறுகின்றனர். இதிலும், மிகக் குறைந்த பேருக்கே சென்னை ஐஐடியில் இடம் கிடைக்கும். மற்றவர்களுக்கு பிற மாநிலத்திலுள்ள ஐஐடிக்களில்தான் இடம் கிடைக்கும்.

தரவரிசைப் பட்டியலிலும் முன்னிலை பெற்ற ஆந்திர மாணவர்கள்

நிகழாண்டு எம்.பி.பி.எஸ்., பி.இ. படிப்பு சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலிலும் பிற மாநில மாணவர்களே முன்னிலை பெற்றுள்ளனர். தமிழக மாணவர்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

எம்.பி.பி.எஸ். சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் பள்ளியில் படித்த எம்.வி. ஆதித்யா மகேஷ் என்ற மாணவிதான் முதலிடம் பிடித்தார்.

அதுபோல பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலில், முதல் 10 இடங்களைப் படித்தவர்களில் 6 பேர் பிற மாநிலங்களில் படித்தவர்கள். முதலிடம் பிடித்த அபூர்வா கேளத்திலும், 3-ஆம் இடம் பிடித்த பரதன், 4-ஆம் இடம் பிடித்த ரக்ஷனா, 5-ஆம் இடம் பிடித்த ஷிவராம் கிருத்விக், 6-ஆம் இடம் பிடித்த ஹர்ஷிதா, 7-ஆம் இடம் பிடித்த ஷேக் அப்துல் சமீர் ஆகிய 5 பேரும் 10-ஆம் வகுப்பு வரை தமிழகத்தில் படித்துவிட்டு மேல்நிலைக் கல்வியை ஆந்திரம், தெலங்கானா பள்ளிகளில் அந்தந்த மாநில கல்வி வாரியத்தின் கீழ் படித்தவர்கள்.

இதுபோல தமிழை ஒரு பாடமாகப் படிக்காமல், பிற மாநில கல்வி வாரியங்களின் கீழ் குறைந்த எண்ணிக்கையிலான பாடங்களைப் படித்து தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தமிழக உயர்கல்வி நிறுவனங்களில் இடங்களைத் தேர்வு செய்த பிறகுதான், தமிழக பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தேர்வு செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது.

இது, ஆந்திர மாணவர்களைவிட தமிழக மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும் என்பதே கல்வியாளர்களின் கவலையாக உள்ளது.

"நீட்' கட்டாயமானால் மேலும் அதிகரிக்க வாய்ப்பு?

"நீட்' போன்ற பொது நுழைவுத் தேர்வுகள் கட்டாயமாக்கப்படும்போது, இந்த நிலை மேலும் மோசமடையும். தமிழக மருத்துவ இடங்களில் ஆந்திரம், கேரள மாணவர்களுக்குத்தான் இடம் கிடைக்கும். தமிழக மாணவர்களோ ஐஐடி சேர்க்கையில் உள்ளதுபோல, நூற்றுக்கும் குறைவானர்களே எம்.பி.பி.எஸ். சேரக்கூடிய நிலை உருவாகும்.

ஏனெனில், "நீட்' பொதுத் தேர்வு பாடத் திட்டத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, 30 சதவீதத்துக்கும் அதிகமான பாடங்கள் தமிழக பிளஸ்-2 பாடத் திட்டத்தின் கீழ் வரும் வேதியியல், கணிதப் பாடங்களில் இடம்பெறவில்லை.

பாடத் திட்டங்களில் மாற்றம் தேவை!

கால மாற்றத்துக்கு ஏற்ப பாடத் திட்டத்தில் மாற்றம் கொண்டு வராதது, தொழில்நுட்ப வளர்ச்சி போன்ற காரணங்களால் ஐஐடி நுழைவுத் தேர்வு, பொறியியல், மருத்துவச் சேர்க்கைகளில் தமிழக மாணவர்கள் பின்தங்கி உள்ளனர் என கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் நடைபெறும் சேர்க்கைகளில் தமிழக மாணவர்கள் முன்னுரிமை பெறும் வகையில், என்.சி.இஆர்.டி. பாடத் திட்டத்தின் அடிப்படையில் பள்ளி பாடத் திட்டத்திலும், தேர்வு முறையிலும் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

 

பாடத் திட்டம் மாற்றப்படாதது ஏன்?

மேல்நிலைப் பள்ளி வகுப்புகளில் பாடத் திட்டங்களில் மாற்றம் கொண்டுவராதது ஏன் என கேள்வி எழுப்புகிறார் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

தேசிய கல்வித் திட்டம் 2005-இன் கீழ் பத்தாம் வகுப்பு வரையிலான பாடத் திட்டங்களில் தமிழக அரசு மாற்றம் கொண்டு வந்தது. அதுபோல, பிளஸ்-1, பிளஸ்-2 பாடத் திட்டத்தில் மாற்றம் கொண்டுவருவதற்காக, 3 ஆண்டுகளுக்கு முன்னர் வரைவு பாடத் திட்டத்தை உருவாக்கி இணையதளத்தில் வெளியிட்டு, கருத்துகளையும், பரிந்துரைகளையும் தமிழக அரசு கேட்டது.

இதன்படி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு, அதற்கு அரசும் ஒப்புதலும் அளித்தது. ஆனால், அப்படியே கிடப்பில் போடப்பட்டுவிட்டது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை தேசிய கல்வி வாரிய பாடத் திட்டத்துக்கும், தமிழக கல்வி வாரிய பாடத்திட்டத்துக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இருக்காது.

ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக பிளஸ்-1, பிளஸ்-2 பாடத் திட்டத்தில் எந்தவித மாற்றமும் செய்யப்படவே இல்லை. இதனால் 10 ஆண்டுகளாக பழைய பாடத் திட்டமே நடைமுறையில் உள்ளது.

இது தமிழக மாணவர்களை பெரிய அளவில் பாதிக்கும். எனவே, தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்பவும், என்.சி.இ.ஆர்.டி. பாடத் திட்டத்துக்கு ஏற்பவும் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை பிளஸ்-1, பிளஸ்-2 பாடத் திட்டத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்றார்.

 

"கற்பிக்கும் முறையிலும் மாற்றம் தேவை'

பாடத் திட்டத்தில் மட்டுமன்றி, கற்பிக்கும் முறையிலும் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்கிறார் தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சங்கத் தலைவர் சாமி.சத்தியமூர்த்தி.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

அரசு, தனியார் பள்ளிகளில் பிளஸ்-1 பாடங்கள் நடத்தப்படுவதே இல்லை. அனைவரையும் தேர்ச்சி கொடுத்து, பிளஸ்-2 வகுப்புக்கு அனுப்பிவிடுகின்றனர்.

உயர்கல்வி படிப்புகளுக்கும் அடித்தளமாக, அறிவை வளர்க்கும் 60 சதவீத விவரங்கள் இருப்பது பிளஸ் 1 பாடத் திட்டத்தில்தான்.

இருப்பினும், பிளஸ் 1 பாடங்களை எந்தவொரு பள்ளியும் நடத்துவதே இல்லை. நேரடியாக பிளஸ் 2 பாடங்களுக்குச் சென்று விடுகின்றனர். அவற்றை புரிதல் இன்றி. மனப்பாட முறையில் படிக்கும் மாணவர்கள், மருத்துவம், பொறியியல் படிப்புகளில் சேர்ந்த பிறகு எதுவுமே புரியாமல் திணறுகின்றனர்.

எனவே, பாடங்களை கற்பிக்கும் முறையிலும், தேர்வு முறையிலும் மாற்றம் கொண்டுவர வேண்டும். பிளஸ் 1 தேர்வுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.

மேலும், ஆந்திரம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் உள்ளதுபோல், போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார்படுத்துகிற வகையில் பள்ளி பாடத் திட்டத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்றார்.


 

புதன், 22 ஜூன், 2016

புத்தகமில்லா கல்விக்கு வழிகாட்டி: அரசு நடுநிலைப் பள்ளி அறிவியல் ஆசிரியர்.


புத்தகமில்லா கல்விக்கு வழிகாட்டியாகத் திகழ்கிறார் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அரசு நடுநிலைப் பள்ளி அறிவியல் ஆசிரியர்.

பள்ளிகளுக்கு புத்தகங்களை சுமந்து சென்று வகுப்பறைகளில் கரும்பலகைகளில் எழுதிப் படித்த காலம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. பாடங்களைக் கற்பிப்பதற்கு தற்போது பல்வேறு நவீனத் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்நிலையில், அறிவியல் பாடங்களை கணினி மூலம் கற்பித்து, புத்தகமில்லா கல்விக்கு வழிகாட்டியாகத் திகழ்கிறார் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகேயுள்ள கண்ணக்கன்காடு அரசு நடுநிலைப் பள்ளியின் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் எஸ்.ரவி. தனது முயற்சிகள் குறித்து அவர் 'தி இந்து' விடம் கூறியதாவது:

கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் அறிவியல் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது, ஒரு பாடத்தில் குறிப்பிடப்பட்டிருந்த எரிமலையைப் பற்றி மாணவர்களுக்கு விளக்கிக் கொண்டிருந்தேன்.

புத்தகத்தில் எரிமலையின் படம் இருந்தாலும், அதன் செயல்பாடுகளை நான் பலமுறை விளக்கி யும்கூட மாணவர்கள் முழுமை யாகப் புரிந்துகொள்ளவில்லை என்பதை அறிந்தேன்.

மறுநாள் இணையதளத்தில் இருந்து எரிமலை வெடிப்பது போன்ற வீடியோவை டவுன்லோடு செய்து, அதை எனது மடிக்கணினி மூலம் வகுப்பறையில் காட்டிய போது, மாணவர்கள் எளிதில் புரிந்து கொண்டனர்.

புத்தகத்தைக் கொண்டு ஒரு மணி நேரம் விளக்கியபோதும் புரிந்து கொள்ளாததை, வீடியோ மூலம் விளக்கியபோது அரை நிமிடத்தில் மாணவர்கள் புரிந்துகொண்டனர். மடிக்கணினியில் ஒரே நேரத்தில் 2 அல்லது 3 மாணவர்கள் மட்டுமே பார்க்க முடியும்.

இந்த சிரமத்தைப் போக்குவதற்காக, ஒரே நேரத்தில் அனைவரும் பார்க்கும்வகையில், ஒரு சேவை அமைப்பிடம் இருந்து புரொஜக்டரை நன்கொடையாகப் பெற்று, வகுப்பறையில் பயன் படுத்துகிறேன்.

அறிவியல் பாடப் புத்தகத்தை ஸ்கேன் செய்து, கற்பிக்கக்கூடிய பாடத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் புரொஜக்டர் மூலம் பெரிதாக திரை யில் காண்பிப்பதாலும், அந்த பாடம் தொடர்பான வீடியோக்களை காண்பிப்பதாலும் மாணவர் கள் எளிதில் பாடத்தைப் புரிந்து கொள்கிறார்கள். இதற்காக, நூற்றுக்கணக்கான வீடியோ காட்சிகளைப் பயன்படுத்துகிறேன் என்றார்.

கிராமப்புற மாணவர்களின் மேம்பாட்டுக்காக அனைத்து அரசு பள்ளிகளிலும் புத்தகமில்லா கற்றல் முறையை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே ஆசிரியர் எஸ்.ரவியின் கோரிக்கையாகும்.






25 சதவீதம் இடஒதுக்கீடு: தனியார் பள்ளிகள் மீது கல்வியாளர்கள் குற்றச்சாட்டு


கடந்த 2009-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்கள், விளிம்பு நிலை மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப் பட வேண்டும். இதற்கு ஆகும் செலவை (பள்ளிக்கு நிர்ணயிக்கப் பட்ட கல்விக் கட்டணம்) சம்பந்தப்பட்ட தனியார் பள்ளி நிர்வாகத் துக்கு அரசு வழங்கிவிடும். சிறு பான்மையினர் பள்ளிகளுக்கு மட்டும் இந்த சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2011-ல் தொடங்கி கடந்த 5 ஆண்டு காலமாக இந்த சட்டம் நடைமுறையில் உள்ளது. எனினும் ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத இட ஒதுக்கீட்டை பெரும் பாலான தனியார் பள்ளிகள் முழுமை யாக கடைபிடிப்பது இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதுகுறித்து நெல்லை மனோன்மணியம் சுந்தர னார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வி.வசந்திதேவி கூறும்போது, "இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி இடஒதுக்கீடு வழங்குவதை பெரும் பாலான பள்ளிகள் பின்பற்றுவதே இல்லை. கல்வித்துறையும் தனியார் பள்ளிகளுக்கு சாதகமாகவே நடந்துகொள்கிறது.

பொறியியல் படிப்பில் பின்பற்றப் படும் ஒற்றைச்சாளர முறை மாண வர் சேர்க்கை முறையைக்கூட இந்த இடஒதுக்கீட்டு மாணவர் சேர்க் கையில் பின்பற்றலாம்" என்றார்.

தேவை இயக்கம் ஒருங்கிணைப் பாளர் ஏ.த.இளங்கோ கூறும் போது, "25 சதவீத இட ஒதுக்கீட் டில் எத்தனை இடங்கள் உள்ளன என்ற விவரங்களை அனைவருக் கும் தெரியும்படி அறிவிப்புப் பலகையில் வெளியிட வேண்டும். ஆனால், 99% பள்ளிகள் இதை கடைபிடிப்பதில்லை.

தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு சரியாக பின்பற்றப்படு கிறதா இல்லையா என்பதை ஆய்வு செய்ய சமூக ஆர்வலர்கள், கல்வித்துறை அதிகாரிகள் அடங் கிய கண்காணிப்புக் கமிட்டி அமைக்க வேண்டும். இந்த கமிட்டி தனியார் பள்ளிகளில் ஆய்வு மேற் கொண்டு ஒவ்வொரு வாரமும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என்றார்.

தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட் ரிக் பள்ளிகள் சங்கப் பொதுச் செயலாளர் ஜி.ஆர்.நந்தகுமார் கூறும்போது, "ஏழை மாணவர் களுக்கான 25 சதவீத இடஒதுக் கீட்டை பெரும்பாலான பள்ளிகள் நடைமுறைப்படுத்தி வருகின்றன. யார் யாருக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது, இடம் கொடுக்கப் படவில்லை என்றால் அதற்கான காரணம் என அனைத்து விவரங் களையும் கல்வித்துறை அதிகாரி கள் ஆய்வுசெய்து நடவடிக்கை எடுக்கிறார்கள்.

இந்த கல்வி ஆண்டில் மட்டும் 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் சுமார் ஒன்றரை லட்சம் ஏழை மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு உள்ளனர்" என்றார்.

பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செய லாளர் பி.பி.பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறும்போது, "தனியார் பள்ளி களில் மொத்த இடங்கள், 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் வரும் இடங்கள் போன்ற விவரங்களை அறிவிக்க வேண்டும் என்று அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டி நெறிமுறைகள் கூறுகின்றன. தனி யார் பள்ளிகள் அருகே வசிக்கும் ஏழை மக்களிடம் கேட்டால் இந்த விவரங்கள் அவர்களுக்கு தெரி யாது. பள்ளிக்கு வெளியே அறி விப்பு வைத்தால்தானே அவர் களுக்கு விவரங்கள் தெரியும். கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி இடஒதுக்கீடு வழங்காத பள்ளி கள் மீது கிரிமினல் நட வடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

மூத்த கல்வியாளர் எஸ்.எஸ்.ராஜகோபாலன் கூறும்போது, "தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. மாணவர்களுக்கு தரமான கல்வியை தான் வழங்குவதற்குப் பதிலாக அந்த பொறுப்பை தனி யாரிடம் வழங்கி தன் பொறுப்பை அரசு தட்டிக்கழிக்கிறது.

தமிழகத்தில் 1978-க்கு பின்னரே தனியார் பள்ளிகள் வர ஆரம்பித்தன. தரமான கல் வியை அரசு வழங்கினால் தனி யார் பள்ளிகளில் ஏழை மாணவர் களுக்கு இடஒதுக்கீடு என்பதற்கு அவசியமே ஏற்படாது" என்றார்.

மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநர் (பொறுப்பு) வி.சி.ராமேஸ்வர முருகன் கூறும்போது, "ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதில் தமிழ்நாடுதான் முன்மாதிரி மாநில மாக விளங்குகிறது. இடஒதுக் கீட்டை பின்பற்றாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இதை கண்காணிப்பதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தலை மையில் கண்காணிப்பு குழுக்கள் செயல்படுகின்றன. இதில் மாவட்ட கல்வி அதிகாரிகள், மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி, உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகள், மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்" என்றார்.


 

CBSC NET JULY 2016 Download Admit Card

NATIONAL ELIGIBILITY TEST

(Last Update :12/04/2016)

 On behalf of UGC, the Central Board of Secondary Education announces holding of the National Eligibility Test (NET) on 10th July, 2016 (SUNDAY) for determining the eligibility of Indian nationals for the Eligibility for Assistant Professor only or Junior Research Fellowship & Eligibility for Assistant Professor Both in Indian universities and colleges. CBSE will conduct NET in 83 subjects at 89 selected NET Examination Cities spread across the country.  

The candidates who qualify for the award of Junior Research Fellowship are eligible to pursue research in the subject of their post-graduation or in a related subject and are also eligible for Assistant Professor. The universities, institutions, IITs and other national organizations may select the JRF awardees for whole time research work in accordance with the procedure prescribed by them. The award of JRF and Eligibility for Assistant Professor both OR Eligibility for Assistant Professor only will depend on the performance of the candidate in all three papers of NET. However, the candidates qualifying exclusively for Assistant Professor will not be considered for award of JRF.     

NATIONAL ELIGIBILITY TEST

(Last Update :12/04/2016)

 On behalf of UGC, the Central Board of Secondary Education announces holding of the National Eligibility Test (NET) on 10th July, 2016 (SUNDAY) for determining the eligibility of Indian nationals for the Eligibility for Assistant Professor only or Junior Research Fellowship & Eligibility for Assistant Professor Both in Indian universities and colleges. CBSE will conduct NET in 83 subjects at 89 selected NET Examination Cities spread across the country.  

The candidates who qualify for the award of Junior Research Fellowship are eligible to pursue research in the subject of their post-graduation or in a related subject and are also eligible for Assistant Professor. The universities, institutions, IITs and other national organizations may select the JRF awardees for whole time research work in accordance with the procedure prescribed by them. The award of JRF and Eligibility for Assistant Professor both OR Eligibility for Assistant Professor only will depend on the performance of the candidate in all three papers of NET. However, the candidates qualifying exclusively for Assistant Professor will not be considered for award of JRF.     

 

NATIONAL ELIGIBILITY TEST

(Last Update :12/04/2016)

 On behalf of UGC, the Central Board of Secondary Education announces holding of the National Eligibility Test (NET) on 10th July, 2016 (SUNDAY) for determining the eligibility of Indian nationals for the Eligibility for Assistant Professor only or Junior Research Fellowship & Eligibility for Assistant Professor Both in Indian universities and colleges. CBSE will conduct NET in 83 subjects at 89 selected NET Examination Cities spread across the country.  

The candidates who qualify for the award of Junior Research Fellowship are eligible to pursue research in the subject of their post-graduation or in a related subject and are also eligible for Assistant Professor. The universities, institutions, IITs and other national organizations may select the JRF awardees for whole time research work in accordance with the procedure prescribed by them. The award of JRF and Eligibility for Assistant Professor both OR Eligibility for Assistant Professor only will depend on the performance of the candidate in all three papers of NET. However, the candidates qualifying exclusively for Assistant Professor will not be considered for award of JRF.