புதன், 15 ஜூன், 2016

திருமணம் செல்வ கேசவராய முதலியார் (1864-1921)

திருமணம் செல்வ கேசவராய முதலியார் (1864-1921), தமிழ், ஆங்கிலம், தெலுங்கு உள்ளிட்ட
மொழிகளில் புலமை பெற்றுத் திகழ்ந்தவர். பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக
பணியாற்றினார். தமிழுக்கு கதி இருவர்... என்று கூறினார். க என்பது கம்பரையும், தி என்பது
திருவள்ளுவரையும் குறிக்கின்றன. வியாகோவை, திருவள்ளுவர், தமிழ், கண்ணகி சரித்திரம் உள்ளிட்ட
நூல்களை எழுதியுள்ளார். சிறந்த நூல்களைப் பதிப்பித்து தமிழுக்கு வளம் சேர்த்தார். அதற்காக பல
துன்பங்களைத் தாங்கிக் கொண்டவர். தமிழறிஞர்கள் ரா.பி.சேதுப்பிள்ளை மற்றும் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் இவருடைய மாணவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக