புதன், 15 ஜூன், 2016

வ.அய்.சுப்பிரமணியனார் (1926-2009)

இந்தியாவிலேயே விரல் விட்டு எண்ணக் கூடிய மொழி நூல் அறிஞர்களில் தலைமையானவர்
வ.அய்.சுப்பிரமணியனார் (1926-2009). அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தமிழ் பயின்று, பின்னர்
அமெரிக்காவில் இன்டியானா பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பை முடித்தார். இவர் தலைசிறந்த
தமிழறிஞர். மொழிநூற் புலமை பெற்றவர். தமிழின் பெருமையை அமெரிக்கா, லண்டன், ஜெர்மனி,
ஜப்பான், மலேசியா மற்றும் இலங்கை ஆகிய வெளிநாடுகளில் பரப்பியவர். உலகத் தமிழ் மாநாட்டில்
கலந்து கொண்டு அரிய ஆய்வுக் கட்டுரைகளை வழங்கியவர். சுப்பிரமணியம் 180 ஆராய்ச்சிக் கட்டுரைகளையும், 14 நூல்களையும் படைத்து தமிழுக்கு அருந்தொண்டாற்றியுள்ளார். இவர் தஞ்சை
தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணை வேந்தராக பணியாற்றிய பெருமையுடையவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக