செவ்வாய், 25 அக்டோபர், 2016

செட்' தேர்வு: 14 சதவீதம் பேர் தேர்ச்சி

பேராசிரியர் பணி தகுதிக்காக, தமிழக அரசு நடத்திய, 'செட்' தேர்வில், 14 சதவீதம் பேர் மட்டுமே தகுதி பெற்றுள்ளனர்.தமிழகத்தில் உள்ள கல்லுாரிகள் மற்றும்பல்கலைகளில், பேராசிரியர் பணியில் சேர்வதற்கான, செட் தேர்வு, பிப்ரவரியில்நடந்தது.
இதன் முடிவை, தேர்வை நடத்திய, அன்னை தெரசா பல்கலை நேற்று வெளியிட்டது.தேர்வு எழுதிய, 53 ஆயிரத்து, 803பேரில், 23 ஆயிரத்து, 271 பேர், நிர்ணயித்த, 'கட் - ஆப்' மதிப்பெண்பெற்றனர். அதில், பல்கலை மானியக்குழு விதிகளின்படி, பொதுப்பிரிவில், 3,704 பேர்; பாட வாரியான பிரிவில், 3,832 பேர் என, 7,536 பேர் மட்டுமே, பேராசிரியர் பணியில் சேர தகுதி பெற்றுள்ளனர். தேர்வு எழுதியோரில்,இது, 14 சதவீதம்.
இது குறித்து, செட்தேர்வு குழு உறுப்பினர் செயலர், பேராசிரியர் கலா கூறுகையில், ''தேர்வர்களின் மதிப்பெண், கட் - ஆப் மதிப்பெண், தேர்ச்சிஉள்ளிட்ட அனைத்து தகவல்களும், அவரவரின் தேர்வு முடிவு அறிக்கையில், குறிப்பிடப்பட்டு உள்ளது. விடைத்தாள் நகல்,வினாத்தாள், விடைக்குறிப்புபோன்ற அனைத்தும், இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன,'' என்றார்.
நெட், செட் சங்க தலைவர் நாகராஜன் கூறுகையில், ''அனைத்து தேர்வர்களின் மதிப்பெண் பட்டியலையும், இணையதளத்தில் வெளியிடவேண்டும்,'' என்றார்.
தேர்வர்களுக்கு மட்டும் 'ரிசல்ட்' :
பல்கலையின் இணையதளத்தில், பதிவு எண், வரிசை எண், மொபைல் போன் எண், தேர்வு எழுதிய பாடம், தேர்வு மையம், இ - மெயில் முகவரி ஆகியவற்றை பதிவு செய்த, தேர்வர்களுக்குமட்டும், ஆன்லைனில் முடிவுகள் அனுப்பப்பட்டன.பதிவு எண், வரிசை எண்ணை மறந்தோர், தெரசா பல்கலைக்கு, இ -மெயில் அனுப்பி,மதிப்பெண்ணை தெரிந்து கொள்ளலாம்.

திங்கள், 24 அக்டோபர், 2016

TNSET 2016 RESULT PUBLISHED செட் தேர்வின் RESULT வெளியிடப்பட்டுள்ளது

தமிழக அரசின் உதவிப் பேராசிரியர் பணிக்கான, செட் 2016 result published

கல்லுாரி மற்றும் பல்கலைகளில் உதவிப் பேராசிரியர் பணியில் சேர, மத்திய அரசின்,
'நெட்' அல்லது மாநில அரசின், 'செட்' தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
'செட்' தேர்வு, மாநில அரசால் நடத்தப்படுகிறது.செட் தேர்வின் result
வெளியிடப்பட்டுள்ளது Plead see the web ADRESS.
http://www.setresult2016.in

 

வெள்ளி, 14 அக்டோபர், 2016

அமெரிக்காவின் பிரபல பாடலாசிரியர், பாடகர் மற்றும் இசை ஆளுமையான பாப் டைலனுக்கு (75) 2016-ம் ஆண்டுகான இலக்கிய நோபல் பரிசு

அமெரிக்காவின் பிரபல பாடலாசிரியர், பாடகர்
மற்றும் இசை ஆளுமையான பாப் டைலனுக்கு
(75) 2016-ம் ஆண்டுகான இலக்கிய நோபல்
பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு பாடலாசிரியருக்கு நோபல்
வழங்கப்படுவது இதுவே முதல்முறை. இது பல
உலக இலக்கிய ஆர்வலர்களுக்கு ஆச்சரியத்தை
ஏற்படுத்திய அறிவிப்பாக திகழ்கிறது.
"அமெரிக்காவின் சிறந்த பாடல் மரபில் புதிய
கவித்துவ வெளிப்பாடுகளை படைத்ததற்காக"
பாப் டைலனுக்கு நோபல் வழங்குவதாக
நோபல் அகாடமி தனது செய்திக்குறிப்பில்
கூறியுள்ளது.
பாப் டைலன்: வாழ்க்கைக் குறிப்புகள்
பாப் டைலன் 1941-ம் ஆண்டு மே மாதம்
அமெரிக்காவின் மினசோட்டாவில் உள்ள
டியூலுத்தில் பிறந்தார். ஹிப்பிங் என்ற நகரில்
நடுத்தர யூத குடும்பத்தில் வளர்ந்தார். பதின்ம
வயதில் நிறைய இசைக்குழுக்களில் இவர்
பாடியும் எழுதியும் வந்துள்ளார். நாளடைவில்
அமெரிக்க நாட்டுப்புற இசை மீது
ஈர்க்கப்பட்டார்.
இவரது பல ஆதர்சங்களில் குறிப்பிடத்தகுந்தவர்
நாட்டுப்புற பாடகர் வுடி கத்ரி ஆவார்.
மேலும் பீட் தலைமுறை மற்றும் நவீனத்துவ
கவிஞர்களும் இவர் மீது தனிப்பட்ட தாக்கம்
செலுத்தியுள்ளனர். 1961-ம் ஆண்டு நியுயார்க்
குடிபெயர்ந்த டைலன் கிரீன்விச் கிராமத்தில்
கிளப்கள், விடுதிகளில் இசை நிகழ்ச்சிகளை
நடத்தி வந்தார். இந்நிலையில்தான் இசைத்தட்டு
தயாரிப்பாளர் ஜான் ஹேமண்ட் என்பவரை
சந்தித்து தனது முதல் ஆல்பமான 'பாப்
டைலன்' (1962) என்பதற்கு ஒப்பத்தத்தில்
கையெழுத்திட்டார்.
அடுத்த சில ஆண்டுகளில் பல ஆல்பங்களை
பாப் டைலன் வெளியிட வெகுஜன இசையில்
இது மிகப்பெரிய தாக்கத்தை அமெரிக்காவில்
ஏற்படுத்தியது. குறிப்பாக Bringing It All Back
Home, Highway61 Revisited-1965, Blonde On
Blonde-1966 and Blood On The Tracks-1975.
ஆகியவை பிரபலமடைந்தன.
இதன் பிறகு இவரது மாஸ்டர் பீஸ் என்று
கருதப்படும் Oh Mercy (1989), Time out of
mind (1997) மற்றும் Modern Times (2006)
ஆகியவை இவரை புகழின் உச்சிக்குக்
கொண்டு சென்றது.
மனிதனின் சமூக சூழ்நிலைமைகள், மதம்,
அரசியல் மற்றும் காதல், அன்பு ஆகியவற்றை
பாடுபொருள்களாகக் கொண்டு இவரது
ஏகப்பட்ட இசைத்தொகுப்புகள் வெளிவந்தன.
இவரது பாடல் வரிகள் பத்திரிகைகளில்
வெளியாகின. ஒரு கலைஞராக பன்முகத் திறமை
வாய்ந்தவர் பாப் டைலன். ஓவியராக, நடிகராக,
திரைக்கதாசிரியராக இவர் பன்முக ஆளுமை
கொண்டவர்.
ஆல்பங்கள் நீங்கலாக டைலன் பரிசோதனை
படைப்புகளையும் வெளிக்கொணர்ந்துள்ளார்.
இவரது Tarantula (1971) மற்றும் எழுத்துகள்,
ஓவியங்கள் தொகுப்பு (1973), மற்றும் இவரது
சுயசரிதை நூலான Chronicles (2004)
ஆகியவையும் குறிப்பிடத்தக்கது. சுயசரிதை
நூலில் இவரது ஆரம்பகால நியூயார்க்
நினைவுகள் வெகுஜனக் கலாச்சாரத்தில்
தனிப்பட்ட வாழ்வின் அம்சங்களை
எடுத்துரைப்பதாக அமைகிறது.
1980களிலிருந்து பாப் டைலன் தொடர்ச்சியாக
பயணத்தில் இருந்தார். பாப் டைலன்
அமெரிக்காவின் ஒரு ஆளுமை. சமகால
இசையில் இவரது தாக்கம் ஆழமானது.