சனி, 17 டிசம்பர், 2016

சாகித்ய அகாதமி

இந்திய மொழி இலக்கியங்களை ஊக்குவிக்கும் வகையில் நாட்டின் முதல் பிரதமர் நேருவால் 1954-ல் தொடங்கிவைக்கப்பட்ட அமைப்பு சாகித்ய அகாதமி. ஆண்டுதோறும் அதன் சார்பில் இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளிலும், ஒவ்வொரு மொழிக்கும் ஒரு எழுத்தாளர் எனத் தேர்ந்தெடுக்கப்பட்டு வழங்கப்படும் இந்த விருதானது ஒரு வகையில் அரசு சார்பில் ஒரு படைப்பாளிக்கு அளிக்கப்படும் முக்கியமான கௌரவம். இந்தியாவில் எழுத்தாளர்கள் எழுத்தை நம்பி பிழைப்பு நடத்த முடியாத சூழலில் இந்த விருதுடன் அளிக்கப்படும் பரிசுத் தொகையான ஒரு லட்ச ரூபாய் இன்றைய பொருளாதாரச் சூழலில் ஒரு தொகையே அல்ல; இத்தொகையை ஒரு கோடியாக உயர்த்த வேண்டும் என்ற குரல்கள் ஒலித்தாலும், அதைத் தாண்டியும் சாகித்ய விருதுக்கென ஒரு மதிப்பு இருக்கிறது இது அந்த விருதுக்கான தேர்விலிருந்து உருவாவது

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக